தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பெரியகுளம் பகுதியில் உள்ள உபமின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் இந்த விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக மின்நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளை முடிப்பதற்கு குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு மின்தடை ஏற்படுகிறது. இதனை மின்வாரியம் முன்கூட்டியே முறையாக அறிவித்து அதன்பின் மின்தடை செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு தொடர்ந்து மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால் மின் கோளாறுகளால் ஏற்படும் விபத்துகள் விகிதம் குறைகிறது. அதனால் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் மின்தடை பின்பற்றப்படுகிறது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தின் பெரியகுளம் பகுதியில் உள்ள உபமின்நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு பெரியகுளம் பிரிவில் உயர்மின் கம்பிகளில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த துணை மின்நிலையத்தில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரிய பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!
இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான எ.புதுப்பட்டி, எண்டப்புளி, எ.காமாட்சிபுரம், வேல்நகா், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, தண்ணீர் பந்தல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.