அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - முதலமைச்சர் உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு – முதலமைச்சர் உத்தரவு!

ஆந்திரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு முக்கியமான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அடிப்படையில் அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப் படியை உயர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

வீட்டு வாடகைப்படி உயர்வு:

இந்தியா, கொரோனா என்ற பெருந்தொற்று பாதிப்பால் கடந்த ஒன்றரை வருடமாக அதிகமான நிதி நெருக்கடி நிலைமை சந்தித்தது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது நிலைமை சீராகி வருவதால் அனைத்து அறிவிப்புகளும் ஓவ்வென்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில்,11வது ஊதிய திருத்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

Airtel, Jio & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – 84 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம்! முழு விவரம் இதோ!

இருப்பினும் இந்த உத்தரவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே பழைய முறைப்படி சம்பள உயர்வு அளிக்க வேண்டும் முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்காதால் கடந்த 3 ஆம் தேதி விஜயவாடாவில் அரசு ஊழியர்கள் மாபெரும் பேரணி நடத்தினர்.அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பலனாக, அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை உயர்த்தி ஆந்திர மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திர பிரதேச அரசு ஊழியர்களுக்கு, அதிகபட்ச உச்சவரம்பு ரூ.25,000 உடன் வீட்டு வாடகைப்படி 24% நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அறிவுறுத்தல்!

இந்த வீட்டு வாடகை படி உயர்வு, அமராவதியில் உள்ள மாநிலச் செயலகம் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட துறைத் தலைவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தும். இந்த நடைமுறை, வரும் 2024 ஆம் ஆண்டு மாதம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

1. 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாவட்டத் தலைமையகம் மற்றும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு – 16% வீட்டு வாடகை படி மற்றும் அதிகபட்ச உச்சவரம்பு ரூ.17,000 ஆகும்.

2. 50 ஆயிரம் முதல் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் உள்ள ஊழியர்களுக்கு – 12 % வீட்டு வாடகைப்படியுடன், உச்சவரம்பு ரூ.13,000 ஆகும்.

3. மற்ற ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 10% வீட்டு வாடகைப்படி, மேலும் திருத்தப்பட்ட வீட்டு வாடகைப்படி உயர்வு, 2022 ஜனவரி 1 முதல் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!