தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை ஏற்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு நேரங்களில் மின்கம்பங்களை சரி செய்யும் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
மதுரையில் டிச.18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை!
மேலும் மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் மற்றும் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றப்படுகிறது. மின் விநியோகம் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!
சூரியநல்லூர், ராசிபுரம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்பள்ளபட்டி, புதுப்பாளையம், குள்ளகாளிபாளையம், கோனார் புரம் ஆகிய பகுதிகள். மற்றும் வெங்கிக்கல்பட்டி, ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடர்பாளையம், குண்டடம், ருத்ராவதி, எடையபட்டி, கொக்கம் பாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (16.12.2021) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.