மதுரையில் டிச.18ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை!
தமிழகத்தில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த தனியார் துறைகள் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். அதில் குறிப்பாக தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
டிசம்பர் 23ம் தேதி பொது விடுமுறை? மாநில அரசு விளக்கம்!
இதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி அன்று மதுரை மாவட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் பயன்பெறும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இம்முகாம் வருகிற சனிக்கிழமை அன்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் இணைந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியிடங்களுக்கு ஏற்றவாறு நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!
இம்முகாமில் கலந்து கொள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கு பெற்று தங்களது தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறலாம். இந்த முகாமில் டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் கூட கலந்து கொண்டு தங்களது தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெறலாம். அத்துடன் ஏராளமான தனியார் துறை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளன. இதனால் வேலையில்லா பட்டதாரிகள் பங்கு பெற்று பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.