திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட திசையன்விளை, கோட்டைக்கருங்குளம் மற்றும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை ஜூலை 7ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை
மின்சாரம் என்பது மனித சமுதாயத்தின் அறிவியல் அற்புதங்களில் மிக அளவில் கடந்ததாக பயன்படுகிறது. மின்சாரம் அதிகமான நன்மைகளை செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள மின் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நிலையங்களில் மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு மின்கசிவு, மின் துண்டிப்பு மற்றும் வயர்களில் உரசும் மர கிளைகளை அகற்றுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை – துணை ஆணையர் உத்தரவு!
அந்த வகையில், தற்போது திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம், திசையன்விளை மற்றும் நாங்குநோி சிறப்பு பொருளாதார மண்டலம் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான, கோட்டைக்கருங்குளம் மற்றும் திசையன்விளை, மகாதேவன் குளம், இடையன்குடி, குட்டம், அப்புவிளை, ஆனைகுடி, உவரி, விஜயநாராயணம், முதுமொத்தன்மொழி, ராஜாக்கமங்கலம், வாகைகுளம்.
Exams Daily Mobile App Download
சிறுமளஞ்சி, குமாரபுரம், வாழைத்தோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்கு கள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவம்பலபுரம், பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், ஏ.எம்.ஆர்.எல். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக வள்ளியூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு அறிவித்துள்ளார்.