பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை – துணை ஆணையர் உத்தரவு!

0
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை - துணை ஆணையர் உத்தரவு!
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை - துணை ஆணையர் உத்தரவு!
பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை – துணை ஆணையர் உத்தரவு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மலநாடு தாலுகாக்களில் கடந்த 2 நாட்களாக கனமழை இடைவிடாது கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், சிக்கமகளூரு துணை ஆணையர் ரமேஷ் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நான்கு நாட்கள் விடுமுறை:

கர்நாடகத்தில் கோடை வெயில் சுட்டெரித்த போதும், ஏப்ரல் மாதம் பரவலாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை மழை பெய்தது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவியது. இந்த நிலையில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வந்தது. இதற்கிடையே இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கர்நாடகத்தில் மே கடைசி வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பெங்களூரு, சிவமொக்கா உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் ஜூலை 11ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அந்த வகையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, கலசா, மூடிகெரே, தரிகெரே, என்.ஆர்.புரா, கடூர் ஆகிய தாலுகாக்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை கொட்டுவதால்,பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கனமழை காரணமாக முடிகெரே, கொப்பா, சிருங்கேரி, கலசா, என்.ஆர்.புரா மற்றும் சிக்கமகளூரு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று முதல் ஜூலை 9 வரை விடுமுறை என சிக்கமகளூரு துணை ஆணையர் கே.என்.ரமேஷ் அறிவித்துள்ளார். இருப்பினும், சிக்கமகளூரு தாலுக்காவின் அம்பலே மற்றும் லக்யா ஹோப்ளிகளில் உள்ள பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சிக்கமகளூரு துணை ஆணையர் ரமேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் மாவட்டத்தில் உள்ள மலநாடு தாலுகாக்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் துங்கா, பத்ரா ஆறுகள் மற்றும் பல ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து சிக்கமகளூரு அருகே திங்கள்கிழமை அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது பள்ளி மாணவி ஒருவர் ஓடையில் தவறி விழுந்தார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!