தேனி மாவட்டத்தில் மார்ச் 31ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் கண்டமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மார்ச் 31 ஆம் தேதி அன்று மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 4 வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
மின்தடை அறிவிப்பு:
தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெரிதாக வளர்ந்து தொங்கும் பெரிய மரங்களில் சிக்கி சிரமத்தை ஏற்படுத்தும் தேவை இல்லாத மின்கம்பிகளை அகற்றுவதற்காகவும் மின் வாரியத்தின் சார்பில் பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடந்து வருகிறது. மேலும் இவ்வாறு பணிகளை மேற்கொள்ளும் போது மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். பொதுவாக மின்தடை குறைந்த பட்சம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இருக்கும். அதிகபட்சமாக காலை 9 மணி முதல் 6 மணி வரை இருக்கும். இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
மீண்டும் டிவிக்கு வரும் இளைய தளபதி விஜய்? Beast படத்திற்காக புது முயற்சி! ரசிகர்கள் குஷி!
இந்நிலையில் தற்போது தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கண்டமனூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மார்ச் 31 இல் காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மண்டபம் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாலதன் தெரிவித்து உள்ளார்.
தேனி மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், கண்டமனூர், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புகுண்டு, கோவிந்த நகரம், வெங்கடாசலபுரம், எம்.சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தார்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மார்ச் 31 ஆம் தேதி அன்று மட்டும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.