மீண்டும் டிவிக்கு வரும் இளைய தளபதி விஜய்? Beast படத்திற்காக புது முயற்சி! ரசிகர்கள் குஷி!
இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பீஸ்ட் படம் வெளிவரவிருக்கும் நிலையில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறாமல் போனதால் தளபதியின் மேடை பேச்சை ரசிகர்கள் மிஸ் செய்து சோகத்தில் மூழ்கினார்கள். அதனால் தற்போது ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் பீஸ்ட்டு பட குழுவினர்கள் புது முயற்சியை மேற்கொண்டுள்ளர்கள்
இளைய தளபதி விஜய் 65:
உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல கோடி ரசிகர்களை கொண்ட இளைய தளபதி விஜய் தமிழ் சினிமா துறைக்கு 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மக்கள் மனதில் மாஸ் ஹீரோவாக, வீட்டில் ஒருவராக குடியிருந்து வருகிறார். தளபதி படம் என்றாலே பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ தான். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. தளபதி 65 வது படமான இந்த படத்துக்கு ” பீஸ்ட் ” என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும், பல எதிர்பார்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இசை புயலுடன் கைகோர்த்த சன் டிவி பிரபல சீரியல் நடிகை கேப்ரியல்லா – ரசிகர்கள் உற்சாகம்!
இதில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் அரபிக் குத்து பாடல் காதலர் தினம் அன்று வெளியாகியிருந்தது. பாடல் வெளியாகியபோது ஆரம்பத்தில் என்னடா வசனமே புரியல என ஒரு பக்க தரப்பினர் கமெண்ட் அடிக்க, தளபதி ரசிகர்களோ அரபிக் குத்து பாடலை விழா போன்று கொண்டாடி வந்த நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில் மக்களின் இளைய தளபதி விஜய் அவர்களே பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது. அதில் ரசிகர்கள் கண்ணே படும் அளவுக்கு விஜய் அவர்கள் வேற லெவல் காஸ்டியூம் அணிந்து மாஸ் காட்டியுள்ளார். பாடலை கேட்ட ரசிகர்கள் குஷியோ குஷி ஆகி உள்ளார்கள்.
மேலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் நடைபெறும் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தற்போது நடைபெறாத காரணத்தால் தளபதியின் மேடைப் பேச்சை ரசிகர்கள் மிஸ் பண்ணுவதாக சோகத்தை தெரிவித்தார்கள். இதனால் ரசிகர்களின் ஆசையை நிறைவு செய்யும் வகையில் பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி சன் டிவி நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் கலந்துக் கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.