தஞ்சாவூரில் நாளை (மார்ச் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் பல இடங்களில் அவ்வப்போது மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டுவிடுகின்றன. இந்த மின் கசிவு மழை காலங்களில் தான் அதிகமாக ஏற்படுகிறது. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர தேர்வு அட்டவணை!
அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவது இல்லை. மின்தடை செய்யப்படும் பகுதிகள் அனைத்துமே முன்கூட்டியே தெரிவுபடுத்தப்படுகிறது. தற்போது தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள துணை நிலையங்களில் பராமரிப்பு பணி செய்யவுள்ளதால் நாளை தஞ்சாவூர் பகுதிக்கு மின்தடை அறிவித்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையிலுள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி செய்யவுள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி சொற்பொறிவாளர் எஸ். பாரவேல் தெரிவித்துள்ள மின்தடை பகுதிகள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர். நகர், காவேரி நகர், எலீசா நகா, நூற்பாலை, மாதா கோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலங்குடி, மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் குளம் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.