TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர தேர்வு அட்டவணை!
தமிழகத்தில் தற்போது முதுகலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வுக்கால திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
திட்ட அட்டவணை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பள்ளிகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 12ம் தேதி அன்று நடைபெற தொடங்கியது. தற்போது இத்தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – பிளாஸ்டிக் அட்டையை ஆர்டர் செய்வது எப்படி!
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையில் நடப்பாண்டில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டுக்கான திட்ட தேர்வுக்கால அட்டவணையை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணிகளில் 9494 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூன் மாதம் 2-வது வாரத்தில் மீண்டும் தேர்வு நடத்தப்படும். அத்துடன் இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்றும் அட்டவணையில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர் பணியிடத்தில் இருக்கும் 167 பணியிடங்களை நிரப்ப ஜூன் 2வது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பும் மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு திட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் பார்த்து பயன்பெற்று கொள்ளலாம்.