மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
மத்திய அரசு துறையில் பணிபுரிந்து வரும் பல்வேறு அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பதவி உயர்வு
மத்திய அரசுத் துறையில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சில கூடுதல் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. பொதுவாக, மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறுவது வழக்கம். அதே போல இந்த முறையின் படி தான் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி (DA) சலுகையும் பெறுகின்றனர். இப்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 31% அகவிலைப்படி தொகையை எதிர்பார்த்து மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
Post Office கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் மத்திய அரசுத் துறையை சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, மத்திய செயலக சேவையின் (CSS) கீழ் பணிபுரியும் அரசு அமைச்சகங்களில் நடுத்தர முதல் மூத்த நிர்வாக நிலை வரையுள்ள ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக பதவி உயர்வு அளிக்கப்படவில்லை. இப்போது மத்திய அரசு அலுவலகங்களில், பிரிவு அதிகாரி, துணைச் செயலர், இயக்குநர் மற்றும் இணைச் செயலர்கள் பதவியில் சுமார் 6,210 அதிகாரிகள் இருப்பதாகவும், இதில் 1,839 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC 29 உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்ப பதிவு தொடக்கம்! மார்ச் 26 கடைசி நாள்!
இந்த பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும் என்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் பாஜக கட்சியை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள், மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பதவி உயர்வு தொடர்பான கோரிக்கைகள் வரும் மார்ச் மாதம் 10ம் தேதிக்குள் நிறைவேற்றப்படலாம்’ என்று அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.