தமிழகத்தில் செப்.12 (திங்கட்கிழமை) மின்தடைக்கான பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் காரைக்குடி பகுதிகளில் உள்ள துணை மின்நிலையத்தில் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா எனவும், மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதா எனவும் சரிபார்க்கப்படுகிறது. அதுவும் தற்போது பருவமழை காலம் என்பதால் அப்போது எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகின்றன. இதனால் தமிழகத்தில் கன மழையின் போதும் கூட மின்தடை ஏற்படாவண்ணம் தகுந்த நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் துணை மின்கலத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டு உள்ளதா என சரி பார்த்து அதற்கு தகுந்தார் போல் வயர்கள் அனைத்தும் மாற்றியமைக்கப்படுகிறது.
TCS, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடரும் WFH! கனமழை எதிரொலி!
இந்நிலையில், காரைக்குடி பகுதியில் உள்ள துணை மின்நிலையத்தில் வரும் திங்கட்கிழமை மாதாந்திர பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் காரைக்குடி பகுதியை சுற்றியுள்ள கோவிலூர் அருகே உள்ள மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் திங்கட்கிழமை (செப்.12) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது என்பது குறித்தான விளக்கத்தைப் பார்க்கலாம்.
அதாவது, கோவிலூா் அருகே மானகிரி, கண்டரமாணிக்கம் நாச்சியாபுரம் பகுதிகளில் உள்ள மானகிரி, தளக்காவூா், கீரணிப்பட்டி, கூத்தலூா், ஆலங்குடி, அப்பல்லோ மருத்துவமனை, செட்டிநாடு பப்ளிக் பள்ளி பகுதிகள், இளங்குடி, தட்டட்டி, கொரட்டி, நாச்சியாபுரம், கம்பனூா், வலையப்பட்டி, கொங்கரத்தி, கண்டரமாணிக்கம், கீழ்பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என துணை மின்நிலைய செயற்பொறியாளர் எம். லதா தேவி தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்