TCS, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடரும் WFH! கனமழை எதிரொலி!

0
TCS, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடரும் WFH! கனமழை எதிரொலி!
TCS, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தொடரும் WFH! கனமழை எதிரொலி!
TCS, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தொடரும் WFH! கனமழை எதிரொலி!

பெங்களூருவில் பெய்து வரும் கனமழையை அடுத்து, டிசிஎஸ், விப்ரோ மற்றும் பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளன. சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி:

பெங்களூரு கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தில் தத்தளித்து வருவதால், பெங்களூருவாசிகள் குறிப்பாக அலுவலகம் செல்பவர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். சர்ஜாபுரா, பெல்லந்தூர், வர்தூர், ஒயிட்ஃபீல்டு மற்றும் வெளிவட்ட சாலை போன்ற சில பகுதிகளில் கடுமையாக தண்ணீர் தேங்கியுள்ளதால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான சூழ்நிலையை அடுத்து, முன்னணி ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் விப்ரோ ஆகியவை தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிவித்துள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளை இந்த நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, டெக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில், பெங்களூரில் உள்ள எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், எங்கள் டெலிவரி குழுக்கள் உரிய எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளோம் என்றும், ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டத்தை உறுதிப்படுத்தினார். மேலும், விப்ரோ நிறுவனம், தனது ஊழியர்களை இன்று வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் செப்.12 ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் பணிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று விப்ரோ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு அமேசான், ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருந்தன. ஒரு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட இடங்க;ளுக்கு யாரும் செல்ல முடியாததால் அங்கு சேவைகளை நிறுத்தி வைத்துள்ளனர். நிலைமை சீரடைந்ததும் பணிகள் அங்கு மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!