சிவகங்கை மாவட்டத்தில் நாளை (டிச.31) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நாளை (டிசம்பர் 31) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரங்களை செயற்பொறியாளர் வெளியிட்டு உள்ளார்.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மாதந்தோறும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் பொதுமக்களுக்கு தொடர்ந்து தடையின்றி மின் சேவை வழங்கப்படுகிறது. நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்பகிர்மானத்தின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
IT ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 120% வரை சம்பளம் உயர்வு! புத்தாண்டில் சூப்பர் அறிவிப்பு!
மின் பராமரிப்பு பணிகளின் மூலம் மழை பெய்தாலும், காற்று அடித்தாலும் மின் வயர்கள் பழுதாகாமல் மற்றும் அறுந்து விழுகாமல் உள்ளது. மழை பெய்யும் போது வயர்கள், கம்பிகள் போன்றவைகள் அறுந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இப்பணிகள் மூலம் வயர்களும், கம்பிகளும் மாற்றம் செய்யப்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் சிவகங்கை பகுதியில் நாளை நடைபெறவுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் சுற்றியுள்ள இடையமேலூர், புதுப்பட்டி, காந்தி நகர்சக்கந்தி, கோமாளிப்பெட்டி, சூவாணிபட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பராமரிப்பு பணிகள் நாளை விரைவாக முடிவடைந்த உடன் மின் விநியோகம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.