விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் 13வது வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் எலிமினேஷன்:
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அனைவரும் தனித்து அவரவர் விளையாட்டை விளையாடுவதே நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், அதில் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் டிக்கெட் டூ பைனல் டாஸ்க் வென்று நேரடியாக யார் பைனலுக்கு போவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
Vijay TV Bigg Boss 5 Promo | டிக்கெட் டூ பைனல் போட்டியில் விளையாடும் அமீர், சிபி, சஞ்சீவ்!
முதல் சுற்றில் நிரூப் வெளியேற்றப்பட்டார். ஆனால் தற்போது வெளியான கருத்துக் கணிப்பின் படி அவர் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அதனால் அவர் வெளியேற வாய்ப்பில்லை. முதல் இடத்தில் பிரியங்கா இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அதிகமான வாக்குகளுடன் தாமரை உள்ளார். நான்காவது இடத்தில் ராஜு இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் பாவ்னி இருக்க, ஆறாவது இடத்தில் சிபி உள்ளார். ஏழாவது இடத்தில் அமீர் இருக்கிறார். கடைசியாக மக்களின் குறைவான வாக்குகளுடன் சஞ்சீவ் இருக்கிறார்.
விஜய் டிவி ‘நம்ம வீட்டு மாப்பிள்ளை’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி? ரசிகர்கள் ஷாக்!
ஆனால் தற்போது இறுதியாக நடைபெற்று வரும் டிக்கெட் டூ பைனல் டாஸ்கில் அமீர், சிபி, சஞ்சீவ் இருக்கிறார்கள். அதனால் இறுதி சுற்றிற்கான டிக்கெட் வென்று இறுதி சுற்றிற்கு மூவரில் ஒருவர் சென்றால் எலிமினேட் ஆகும் போட்டியாளர் மாறுபடும் எனவே இந்த டாஸ்க் வெற்றி பெறுபவரை பொறுத்தே இந்த வார எலிமினேஷன் இருக்கும். மேலும் இதுவரை முடிந்த நான்கு சீசன்களில் மிக குறைவான TRP கொண்ட சீசன் என இந்த சீசன் குறிப்பிடப்பட்டுள்ளது.