IT ஊழியர்களுக்கு ஜாக்பாட் – 120% வரை சம்பளம் உயர்வு! புத்தாண்டில் சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிடம் இருந்து IT சேவைகளை பெருமளவில் இந்திய நிறுவனங்கள் பெற்றது. அதனால் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது.
IT ஊழியர்களுக்கு 120% வரை ஊதியம்:
முதன் முதலில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் மிகுந்த பொருளாதார இழப்பை சந்தித்தது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் குறைந்ததற்கு பின்பு உலக நாடுகளில் இருக்கும் அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகப்படியான தொகையை டெக் சேவை மேம்பாட்டில் முதலீடு செய்து ஊழியர்களின் தேவையை குறைக்க முடிவு செய்தது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து IT சேவை நிறுவனங்களும் தங்களது தரத்தை உயர்த்திக் கொள்ள திட்டமிட்டன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!
அதன்படி இந்திய IT சேவை நிறுவனங்கள் குறைந்த செலவில் சிறந்த IT சேவைகளை வழங்கத் தொடங்கி அதிகப்படியான சேவைகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்றது. அவ்வாறு பெற்ற பின்னர் குறைந்த நேரத்தில் அதிக அளவிலான *திட்டங்களை பெற்றதால் குறிப்பிட்ட தேதிக்குள் ப்ராஜெக்ட்டுகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இந்திய IT சேவை நிறுவனங்கள் தங்களுக்கு தகுதியான மற்றும் திறமையான IT ஊழியர்களை மற்ற நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது புதிதாக சேருபவர்களுக்கு 30 முதல் 45% வரை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!
அதனை தொடர்ந்து அதிக திறமை உடைய IT ஊழியர்களுக்கு 60 முதல் 120% வரை ஊதிய உயர்வு வழங்கி பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். இவ்வாறாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் IT ஊழியர்களுக்கு 120% வரை ஊதிய உயர்வு வழங்கி பணியமர்த்தப்படுவார்கள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது Xpheno நிறுவனத்தின் அறிவிப்பின்படி கடந்த ஆண்டை போல் புல் ஸ்டாக் இன்ஜினியர்ஸ், டேட்டா சியின்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், பேக்என்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் திறமை வாய்ந்த IT ஊழியர்களுக்கு 60 முதல் 120% வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.