தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் - முக்கிய கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 பொங்கல் போனஸ் – முக்கிய கோரிக்கை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கி வருவது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியினை 2020 ஜனவரி 1 முதல் வழங்க கோரி மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய மாநில அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அகவிலைப்படி பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தகுதியுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-1-2021 முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாகவும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு போனஸ் ரூ.3000 வழங்குவதாகவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை குறித்து மதுரையில் அரசு சங்க ஊழியர்கள் சார்பில் முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு 1.7.2021 முதல் 31% சதவீதம் அகவிலைப்படியை ரொக்கமாக கொடுத்து வருகிறது .

மேலும் மத்திய அரசு கடந்த 1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவைத் தொகையை டிசம்பர் 2021 சம்பளத்துடன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை 2020 ஜன.1 முதல் வழங்க வேண்டும் என மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளனர். இதையடுத்து போனஸ் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் ரூ.7000 வரை போனஸ் பெற்று வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் – அரசு திடீர் உத்தரவு! பொதுமக்கள் அதிர்ச்சி!

கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு ரூ.3000 மட்டுமே வழங்கி வருவதாகவும் எனவே தமிழக அரசு போனைஸை ரூ.7000 வரை உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த வகையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் கருணைத் தொகையாக A மற்றும் B பிரிவினர், கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள் ஆகியோர்க்கு வழங்க வேண்டும் என்று உடனிருந்த நிர்வாகிகள் கோரி உள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!