நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்கள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (மார்ச் 10) மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
உலகில் உள்ள மக்களுக்கு பொதுவாகவே மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் சமையல் முதல் அலுவலக வேலை வரை செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். அது மட்டுமல்லாமல் மின்சாரம் தடைபட்டாலும் இன்வெர்ட்டரை வைத்து மின்சாரத்தை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மன்னார்குடியை அடுத்த திருமக்கோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய நாகப்பட்டினம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆ.மதியழகன் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பு என்னவென்றால், மன்னார்குடி அருகில் இருக்கும் திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
மார்ச் 22 முதல் 24 வரை பள்ளி & அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
இந்த காரணத்தால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக்கோட்டை, தென்பரை, ராதாரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கேவிந்த நத்தம், பெருமாள் கோவில் நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூர், பரசுபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நாளை தடை செய்யப்பட்டு உள்ளது.