நாடு முழுவதும் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய அரசு வெளியீடு!
மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 11ஆவது தவணைப் பணம் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டம்:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி மூலமாக ஏழை எளிய விவாசியிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக ரூ.2000 என மொத்தமாக ரூ.6000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்நிலையில் அதே போல வேறொரு திட்டமும் உள்ளது.
மார்ச் 22 முதல் 24 வரை பள்ளி & அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!
மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.36000 பென்சன் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது.இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது ஓய்வுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் பெற முடியும்.
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்நிலையில் 2022 ஜனவரி 1ஆம் தேதி அன்று பிஎம் கிசான் திட்டத்தின் 10ஆவது தவணை பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு செலுத்தியது. 11ஆவது தவணைப் பணம் அடுத்த மாதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், பல விவசாயிகளின் கணக்குகளில், FTO உருவாக்கப்பட்டு, பணம் செலுத்துவதற்கான நிலை நிலுவையில் உள்ளது. FTO என்பது Fund Transfer Order. உங்களுடைய கணக்கிலும் இப்படி உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்த மாதம் பணம் வராமல் போய்விடும்.