நாமக்கல்லில் நாளை (மார்ச் 3) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின் சாதனங்கள் அனைத்தும் சரி பார்க்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் அவ்வப்போது மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு விடுகிறது. மின் சாதனங்கள் பழுதாவதால் அறியாத விதமாக விபத்துகளும் ஏற்பட்டு விடுகின்றனர். இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் உடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் – காரணம் என்ன தெரியுமா?
அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவது இல்லை. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை நிலையங்களில் பராமரிப்பு பணி செய்யவுள்ளதால் நாளை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
நாளை நாமக்கல் மாவட்டத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்: புதன் சந்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொளிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சிபுதூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது.