தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் உடன் ஆலோசனை நடத்தும் முதல்வர் – காரணம் என்ன தெரியுமா?
தமிழக முதல்வர் நாளை (மார்ச் 3) மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனையில் முக்கிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. மேலும் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தீட்டி அதனை செம்மையாக செயல்படுத்தியும் வருகிறது. இந்த நிலையில் புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். 2022ம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 8ம் தேதி சிறப்பு கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மார்ச் 7ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு வெளியீடு!
மேலும் இந்த கூட்டத்தில் 2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி இந்த மாதம் 18ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 19ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை (மார்ச் 3) ) மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பாட வாரியான பொதுத்தேர்வு கால அட்டவணை 2022 – முழு விபரம் வெளியீடு!
இந்த ஆலோசனை கூட்டத்தில் திட்டங்கள் நிறைவேற்றுவது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது போன்றவைகள் பற்றி ஆராயப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.