மார்ச் 7ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு வெளியீடு!
அசாம் மாநிலம் மாஜூலி மாவட்டத்தில் வரும் மார்ச் 7ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் 2022ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பாட வாரியான பொதுத்தேர்வு கால அட்டவணை 2022 – முழு விபரம் வெளியீடு!
இதற்கிடையில் அசாம் மாநிலம் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்கள் வசிக்கும் மாஜூலி தொகுதியின் அதிகார வரம்பிற்குள் மார்ச் 7 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த செப்டம்பர் 27, 2021 அன்று மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் ஆயுசு சர்பானந்தா சோனோவால், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
தமிழகத்தில் மார்ச் 18ம் தேதி பட்ஜெட் தாக்கல்? மார்ச் 5இல் கூடும் அமைச்சரவை! ஏற்பாடுகள் தீவிரம்!
இப்போது தேர்தல் நடைபெறும் மார்ச் 7ம் தேதியன்று அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மார்ச் 7ம் தேதியன்று அனைத்து தொழிற்சாலைகள், தோட்டங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பொது பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை இடங்கள், ஒப்பந்ததாரர்கள் நிறுவனங்கள், தொழில்கள், பட்டறைகள், வங்கிகள், வணிக மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.