தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

02.03.2022: தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதி மற்றும்‌ பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும்‌ தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்‌ இதன்‌ காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

03.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌,
புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது .

04.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கடலூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருச்‌சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, வேலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது .

மார்ச் 7ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு வெளியீடு!

05.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, சென்னை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது .

06.03.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தமிழக உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

02.03.2022: தென்‌ வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தமிழக கடலோரப்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்துலும்‌ இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

03.03.2022: தமிழக கடலோரப்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை? பள்ளிகள் திறப்பு தேதி வெளியீடு!

தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்‌திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

04.03.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வடதமிழக மற்றும்‌ தெற்கு ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடை இடையே மணிக்கு 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

05.03.2022, 06.03.2022: மத்திய மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌, வடதமிழக மற்றும்‌ ஆந்திரா கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே மணிக்கு 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. அதனால் மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!