தமிழகத்தில் நாளை & சனிக்கிழமை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை & சனிக்கிழமை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை & சனிக்கிழமை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை & சனிக்கிழமை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் மின் கம்பிகள், கம்பங்கள் எவ்வித பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் களப்பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை நடுவக்குறிச்சி உப மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. எனவே தட்டாா்மடம், படுக்கப்பத்து, பெரியதாழை, புத்தன்தருவை, நடுவக்குறிச்சி, பூச்சிக்காடு, பிரகாசபுரம் உதிரமாடன்குடியிருப்பு, கொம்மடிக்கோட்டை பிச்சிவிளை ஆகிய பகுதிகளில் மின்பணியாளர்களின் நலன் கருதி நண்பகல் 12 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நாளை மறுநாள் சனிக்கிழமை உடன்குடி உப மின் நிலைய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே உடன்குடி, தைக்காவூா், சீா்காட்சி, செட்டியாபத்து, ஞானியார் குடியிருப்பு, குலசேகரன்பட்டினம், மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

மேலும் எப்போதும்வென்றான் துணை மின் நிலையம் பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே கோவில்பட்டி, இலுப்பையூரணி, இளையரசனேந்தல், எப்போதும்வென்றான், எட்டயபுரம், நாகலாபுரம், கடம்பூா், ஒட்டநத்தம், குளத்தூா், சூரங்குடி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் ,மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் கழுகுமலை, செட்டிக்குறிச்சி துணை மின் நிலையப் பகுதிகளான கழுகுமலை, குமாரபுரம், செட்டிக்குறிச்சி, பெரியசாமிபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றும் கோவில்பட்டி கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!