திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!

0
திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!
திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!
திருச்சியில் நாளை (நவ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பிரபல நிறுவனங்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று பயன் பெறலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இழந்துள்ளது. அதனால் தனியார் நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் இருந்து வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் பல தனியார் நிறுவனங்கள் தங்களை மேம்படுத்தி வருகின்றன. அதனாலும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெருகி வருகிறது. இம்மாதத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்வதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள், ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது நாளை நவ.19ம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுத்துறை தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளது.

கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் அதில் பங்கு கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, ஆதார் அட்டை, மதிப்பெண் சான்று மற்றும் 2 போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வந்து பயனடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முகாமில் கலந்து கொள்ள நினைக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த தகவல்களை நேரில் அல்லது தபாலில் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!