தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

0
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

தமிழகத்தில் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ததை தடை விதிக்க கோரிய மனுவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மேலும் அரசு வேலைகளும் பாதிக்கப்பட்டது. அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!

அதன் பிறகு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்போது 2017 – 2019ம் வரையிலான ஆண்டுகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!

இந்த வழக்கு விசாரணையில் அது அரசுக்கு எதிரான போராட்டம். அந்த அரசே கொள்கை ரீதியான முடிவெடுத்து போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை ரத்து செய்து, பதவி உயர்வு, பணப்பலனை வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட்டு தடை உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். போராட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பதவி உயர்வு, பணப்பலன் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கும் தடை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இது குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!