கொடைக்கானல் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!
கனமழையின் காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நாளை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கனமழை:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதில் பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் முதலியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர்.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – வெள்ளக்காடாய் காட்சி அளிக்கும் கோவில்!
சுற்றுலா தலமான கொடைக்கானலில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர். நாளை மறுநாள் வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.