தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக திருப்பூரில் உள்ள கருவலூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.24) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இவ்வாறு விபத்துகள் ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக தமிழக அரசு மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. அதனால் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின் தடையை பல்வேறு பகுதிகளில் அறிவித்து வருகிறது.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ்நாடு உதவி பெறும் ஆசிரியர் கழகம்!

அதனை தொடர்ந்து திருப்பூரில் உள்ள கருவலூர் துணை மின்நிலையத்தில் நாளை (டிச.24) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் போது நடைபெறும். மேலும் கருவலூர் துணை மின்நிலையத்தால் மின்சாரம் பெறும் பகுதிகளான கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!

இதனை தொடர்ந்து காளிப்பாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்று அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!