ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!

0
ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!
ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் - மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!
ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!

நாட்டில் தற்போது புதிதாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்றின் பாதிப்புகளை கட்டுக்குள் வைப்பதற்காக மத்திய அரசு மாநில அரசுகளுக்கான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து அவற்றை உள்ளூர் அளவில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தல்:

நாடு முழுவதும் ஓமைக்ரான் பரவல் அதிக வேகத்தில் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் நாட்டில் 16 மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் பரவி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 269 பேர் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தற்போது வரை 104 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டிலேயே அதிக பட்சமாக மஹாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 57 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது.

SBI YONO செயலி மூலம் நகைக்கடன் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரங்கள் இதோ!

மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 10% க்கு மேல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டால் அந்த குறிப்பிட்ட பகுதியில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாகவும், மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போடுவதை உறுதி செய்யவும், அதிக கூட்டத்தை கட்டுப்படுபடுத்தவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அறிவுறுத்தல்கள்:

  • மாவட்டங்களில் புதிதாக ஏற்படும் தொற்று, தொற்று பரவல் விகிதம் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
  • இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
  • வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ள இடங்களில் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
  • விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!