SBI YONO செயலி மூலம் நகைக்கடன் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு! முழு விபரங்கள் இதோ!
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் YONO செயலி மூலம் நகைக்கடன் பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகைக்கடன் குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
நகைக்கடன்:
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி வங்கியாக SBI விளங்கி வருகிறது. இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது SBI வங்கி தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் வகையில் வசதிகளை வழங்கி வருகிறது. இதற்கு பிரத்தயேக மொபைல் ஆப் (YONO) அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆப் மூலம் Loan, Transaction மற்றும் வங்கி தொடர்பான அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ள முடியும்.
ATM பண பரிவர்த்தனைக்கு புத்தாண்டு முதல் கட்டணம் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
இத்தகைய வங்கி விவசாயிகளுக்கு உதவும் வகையில் தங்க நகைக்கடன்களை வழங்கி வருகிறது. இந்த கடன் SBI வங்கியின் பிரத்யேக மொபைல் செயலியான YONO ஆப் மூலம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் கடன் பெற விரும்பும் அனைவரும் YONO மொபைல் செயலி மூலம் பெறுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தகைய அறிவிப்பை SBI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தங்க நகைக்கடனானது தங்க கட்டிகளுக்கு வழங்கப்படமாட்டாது. அதே நேரம் 50 கிராம் வரை தங்க நாணயத்திற்கு கடன் வழங்கப்படும்.
இந்த வங்கி கடன் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகள்:
1. 7% வரை குறைவான வட்டியில் கடன் பெறலாம்.
2. மிக எளிமையான முறையிலும், விரைவாகவும் இந்த கடனை YONO செயலி மூலம் பெற முடியும்.
இந்த கடன் பெற தகுதியானவர்கள் விபரங்கள்:
1. விவசாயம் செய்பவர்கள் அதாவது சொந்தம் அல்லது குத்தகை முறையில் பயிர்சாகுபடி செய்பவர்கள் இந்த கடனை பெற முடியும்.
2. பால், இறைச்சி, மீன், மற்றும் ஆட்டுப்பண்ணை வைத்திருக்கும் சுயதொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தங்களின் திட்டம் சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த முதலீடு தேவைப்படும் எனில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
3. RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளும் இந்த கடன் வழங்கப்படுகிறது.
மேலும் விவசாயம் மற்றும் அதற்கு தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக அதிக வட்டியில் பெறப்பட்ட நகைக்கடன்களை திருப்பி செலுத்துவதற்கும் கடன் வழங்கப்படும். ஆனால் இதற்கு அவர்கள் அந்த விபரங்களை எழுதிய பாத்திரத்தில் கையொப்பமிட்டு உறுதிமொழி சான்றிதழ் வழங்கவேண்டும்.