ATM பண பரிவர்த்தனைக்கு புத்தாண்டு முதல் கட்டணம் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது பண பரிவர்த்தனை கட்டணம் ரூ.20 ஆக உள்ளது. இதனை ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கட்டணம் அதிகரிப்பு
தற்போது ஏடிஎம் பண பரிவர்த்தனைக்கான சேவை கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டு வர போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் வருகிற புத்தாண்டு முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இதனை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட முறை ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்ய இலவசமாக வழங்கும். அதனை தாண்டி பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் IAS, IPS தேர்வுகளுக்கு பயிற்சி – தகுதித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது பண பரிவர்த்தனை கட்டணமாக ரூ.20 வசூலித்து வருகிறது. இதனை ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த கட்டணமானது ஒவ்வொரு மாதத்திற்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான அளவை தாண்டி எடுக்கும் போது வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மெட்ரோ நகரங்களில் முதல் 3 முறை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மற்ற நகரங்களில் முதல் 5 முறை பண பரிவர்த்தனைக்கு இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு கட்டண உயர்த்தி கொள்ள அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 10 முதல் 15 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
இதனை பற்றிய தகவல்கள் வாடிக்கையாளர்களை தெரியப்படுத்தும் விதமாக அனைத்து வங்கிகளும் தங்களது வடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை அவர்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதன்படி குறிப்பிட்ட ஏடிஎம் பண பரிவர்த்தனை சேவைக்கு அதிகமாக எடுக்கும் போது சேவை கட்டணமாக ரூ.21 வசூலிக்கப்படும். இந்த நடைமுறையை அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் வருகிற புத்தாண்டு (ஜன.1) முதல் நடைமுறைப்படுத்த போவதாக வங்கிகள் முடிவு செய்துள்ளனர்.