தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தமிழ்நாடு உதவி பெறும் ஆசிரியர் கழகம்!
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் நாளை விடுமுறை வேண்டி கோரிக்கை விடுத்த நிலையில் நாளை விடுமுறை எடுப்பவர்கள் 2022 ஜனவரி 3ம் தேதி பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
ஓமிக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – மாநிலங்களுக்கு மத்திய அரசின் அறிவுறுத்தல்கள்!
நாளையுடன் தேர்வுகள் முடிவடையும் நிலையில் அதே போல நடப்பாண்டும் விடுமுறை அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதும் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டிசம்பர் 25ம் தேதி முதல் 2022 ஜனவரி 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான டிசம்பர் 24ம் தேதியும் விடுமுறை வேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசில் ரூ.58 ஆயிர ஊதியத்தில் வேலை – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
வெளி மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பணிக்கு வருகின்றனர். இவர்கள் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையிலும் பண்டிகையை சிரசாங்க கொண்டாடும் வகையிலும் விடுமுறை அளிக்க வேண்டும் கூறினர். இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான c.l மற்றும் R.H விடுவிப்பு இருக்கும் பட்சத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். மேலும் நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.22 அன்று பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.