திருப்பூர் மாவட்டத்தில் நாளை (அக்.4) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4ம் தேதி அன்று மின் தடை ஏற்படவுள்ள பகுதிகளை தமிழக மின்சார வாரியம் தற்போது அறிவித்து உள்ளது.
மின்வாரியம் அறிவிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் பகுதி வாரியாக அந்தந்த மண்டல பிரிவுகளுக்கு உட்பட்ட துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மின் வழித்தடங்கள் செல்லும் பாதையில் அவற்றில் உரசி கொண்டு இருக்கும் மரக்கிளைகளை அகற்றும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு கருவூல அலுவலக உதவியாளர், தட்டச்சர், காசாளர் காலிப்பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!
அதன்படி தற்போது அம்மாவட்டத்தின் ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப்பணிகள் காரணமாக நாளை 4-ந்தேதி (திங்கட்கிழமை) அதனை சுற்றியுள்ள மற்றும் அத்துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது. இந்த மின்தடையால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.
திருப்பதி டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – IRCTC PACKAGE முழு விபரம்!
மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் :
- ஓலப்பாளையம்
- கண்ணபுரம்
- பா.பச்சாபாளையம்
- செட்டிபாளையம்
- பகவதிபாளையம்
- வீரசோழபுரம்
- வீரணம்பாளையம்
- காங்கேயம்பாளையம்
- முருகன்காட்டு வலசு