தமிழகத்தில் 27, 28ம் தேதிகளில் மின்தடை – பகுதிகள் குறித்த விவரம் இதோ!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடியும்வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாளை (27-09-2022) கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நெசவாளர் தெரு, குளச்சல் பேருந்து நிலையம், பள்ளி விளாகம்அழகனார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை கன்னியாகுமரி உப மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவளம், சாமித்தோப்பு, அஞ்சு கிராமம், வாரியூர், பால்குளம், சின்ன மூட்டம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழக 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கிடையாது – வந்துள்ள அதிரடி மாற்றம்!
அதே போல செப்டம்பர் 28ம் தேதி கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள டென்னிசன் ரோடு உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாகராஜா கோவில், மணி மேடை, டென்னிசன் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்