தமிழக 4, 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கிடையாது – வந்துள்ள அதிரடி மாற்றம்!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 4 , 5ம் மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து இப்பதிவில் மூலம் தெரிந்து கொள்வோம்.
தொகுத்தறி தேர்வு:
தமிழக மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் 1 – 3 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்கள் கற்பிக்க எண்ணும், எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்கும் வகையிலும், திறமைகளை மேம்படுத்தும் வகையிலும் நீதி போதனை வகுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பையும், விளைவையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதாவது முதல் பருவத்தேர்வு. ஆனால் இந்த முறை 4,5ம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வுக்கு பதிலாக தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. ஒரே வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வுக்கு இணையாக இத்தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வானது ஆசிரியர்களின் மொபைல் போன் ஆப் வாயிலாக நடத்தப்படுகிறது. மேலும் 3 நாட்கள் நடைபெறும் இந்த தொகுத்தறியும் தேர்வுக்கு கண்காணிப்பு ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.. அதிகரித்த கட்டணம் – தொடர் விடுமுறை எதிரொலி!
இந்த தேர்வு முடிந்த பின் அதன் மதிப்பீடுகள் அனைத்தும் கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அதில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 10 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்