தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் ஆகஸ்ட் 29ம் தேதி மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
விஜயாபுரி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளை பற்றி மின்வாரியம் முன்னதாக அறிவித்து விடுகிறது. இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் கம்ப தாங்கு கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட நாளில் பராமரிப்பு செய்யும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மக்களுக்கு முன்னதாக வழங்கப்பட்டு விடும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், விஜயாபுரி உபமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கெச்சிலாபுரம் மற்றும் மந்தித்தோப்பு உபமின் நிலையங்களாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கானமீதமுள்ள பணிகளை திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் 29ம் தேதி மேற்கொள்ள இருக்கிறார்கள். இதனால், ஆகஸ்ட் 29ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கெச்சிலாபுரம், கிழவிபட்டி பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என்று கோவில்பட்டி மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்