TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !
தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணிகளில் தொகுதிVIIA, பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-1 பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 21012022 நாளிட்ட அறிவிக்கை எண் 012022-ன் வாயிலாக விண்ணப்பங்களை கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 23.04.2022 முற்பகல் & பிற்பகல் மற்றும் 24.04.2022 முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெற்றதையடுத்து, 18.08.2022 முற்பகல் அன்று நேர்முகத் தேர்வு நடைபெற்று, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு:
இப்பதவிக்கான கலந்தாய்வு சென்னை.600003, தேர்வாணைய சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 05.09.2022 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. மேற்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தரவரிசைப் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணைய தளமான https://www.tnpsc.gov.in/ லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mai மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு காலிப் பணியிடம், வகுப்பு இன சுழற்சி ஆகியவற்றிற்குட்பட்டு தரவரிசையின் படி அனுமதிக்கப்படுவர். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் ‘தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி கலந்தாய்விற்கு குறித்த தேதி மற்றும் நேரத்தில் வர தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்