8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு நிரப்ப படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து காலியாக உள்ள 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று அஞ்சல் தபால் துறை தெரிவித்துள்ளது.
அஞ்சல் துறை
தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பினால் எந்த ஒரு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இதனால் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தற்போது குறைந்த நிலையில் மட்டுமே வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூன் 21) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சமீபத்தில் தான் அஞ்சல் துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அதிகம் விண்ணப்பித்து வந்தனர். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையில் 2 பணிகளுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த முழு விவரத்தினை பார்ப்போம்.
1. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, இந்த பணியின் பெயர் திறமையான கைவினைஞர் (மெக்கானிக், டயர் மேன்).
2. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/07/2022 அன்றைய தேதியின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. இதற்கு மாத சம்பளம் 19,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6. மேலும் இதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆஃப்லைனில் முறையில் தபால் வழியாக மூத்த மேலாளர், அஞ்சல் மோட்டார் சேவைகள், GPO காம்பவுண்ட், புனே – 411001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Exams Daily Mobile App Download
7. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள் என தெரிவித்துள்ளது. இதற்கு எந்தவிதமான கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்துள்ளது.
8. இந்த பணிக்கு தேர்ந்தெடுப்பவர்கள் நேரடியாக புனேவில் பணி அமர்த்தப்படுவார்கள் என அறிவித்துள்ளன.