அஞ்சலகத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் வரை சேமிப்பு – முழு விவரங்கள் இதோ!

0
அஞ்சலகத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் வரை சேமிப்பு - முழு விவரங்கள் இதோ!
அஞ்சலகத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் வரை சேமிப்பு - முழு விவரங்கள் இதோ!
அஞ்சலகத்தில் வெறும் 5 ஆண்டுகளில் 6 லட்சம் வரை சேமிப்பு – முழு விவரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் இதன் மூலமாக கிடைக்கும் பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக வயதானவர்கள் பணத்திற்காக பிறரை சார்ந்து உள்ளதால் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீடுகளில் செலுத்தத் தொடங்கினர். இதில் குறிப்பாக அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகளவு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் இதில் குறைவான முதலீட்டில் அதிக வட்டி தொகையை பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் இருந்து இத்திட்டத்தில் கணக்கை தொடங்க முடியும்.

நாளை முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!

அத்துடன் இதில் நிலையான வருமானம் கிடைப்பதால் வயதானவர்களுக்கு ஏற்ற சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெற்ற நபர் ஒரு மாதத்திற்குள் கணக்கை தொடங்க வேண்டும். மேலும் சாதாரண மக்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஆனால் ஒரு நபர் விஆர்எஸ் பெற்றிருப்பின் 55 வயது நிரம்பியவர் முதல் இதில் கணக்கை தொடங்க முடியும். அத்துடன் ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளர்களாக இருப்பின் 50 வயது நிரம்பியவர் முதல் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதையடுத்து இந்த சேமிப்பு கணக்கில் HUF & NRI-கள் இணைய முடியாது.

தமிழகத்தில் அமலுக்கு வந்த ஞாயிறு முழு ஊரடங்கு – என்னென்ன இயங்கும், இயங்காது? முழு விவரம்!

இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 முதல் அதிகபட்ச தொகையாக 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடுகளை செய்து கொள்ளலாம். ஆனால் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் வழங்கப்படும் தொகைக்கு மேல் அதிகபட்ச தொகை இருக்கக் கூடாது. அத்துடன் ஒரு ஆண்டுக்கு 7.40% வட்டி விகிதம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்கவும் முடியும். இதில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது. இதில் 50000 ரூபாய்கு மேல் வட்டி கிடைத்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இதில் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் கிடைப்பதால் முதியோர்களுக்கு இது ஒரு நல்ல வருமானமாக இருக்கும்.

  • இத்திட்டத்தில் முதலீடு செய்து 5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் சேமிப்பு தொகைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
  • ரூ.10,000 முதலீடு செய்தால் – வட்டி விகிதம் ரூ.3700 கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு தொகையாக – ரூ.13,700 கிடைக்கிறது
  • ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் – முதிர்வு தொகை ரூ.6,85,000 கிடைக்கிறது
  • ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் – முதிர்வு தொகை ரூ.20,55,000 கிடைக்கிறது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!