நாளை முதல் பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாணவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அரசு அதிரடி உத்தரவு:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு முதலே கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஜனவரி 2 வது வார தொடக்கத்தில் தொற்றின் வேகம் அதிகரித்ததால், இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமலுக்கு வந்த ஞாயிறு முழு ஊரடங்கு – என்னென்ன இயங்கும், இயங்காது? முழு விவரம்!
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மஹாராஷ்டிராவில், மாணவர்களின் கற்றல் திறன் அடிப்படையில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன மற்றும் கடந்த வாரம் பள்ளிகளை மீண்டும் திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்துவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழக கூட்டுறவு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – அரசின் புதிய உத்தரவு!
இந்த கோரிக்கைகள் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் பள்ளிகள் திறக்கும் முடிவுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் அடிப்படையில் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 73,25,825 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.