இந்திய பெண்களுக்கு பாதுகாப்பான சிறந்த அஞ்சல் துறை சேமிப்பு திட்டம் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
சேமிப்பு திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் பெண்கள் முதலீடு செய்ய பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. இந்த தபால் நிலைய திட்டங்கள் மூலம் பெண்கள் குறுகிய காலத்தில் பணத்தை சம்பாரித்து தங்களுடைய எதிர்காலத்தை பார்த்து கொள்ள முடியும். அந்த வகையில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் மூலம் 2 ஆண்டுகளில் அதிக பணத்தை ஈட்ட முடியும். இந்த திட்டத்தில் பெண்களுக்கு 7.5சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது 2 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் 2.32 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது FD போலவே இருக்கிறது. இந்த திட்டத்தில் சேர தபால் நிலையம் சென்று இதற்கான படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நீங்கள் KYC ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது ஆதார், பான் கார்டு, காசோலையுடன் பே-இன்-ஸ்லிப்பையும் வழங்க வேண்டும். இந்த திட்டம் நாட்டில் பல வங்கிகளிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.