Post Office இன் சூப்பர் சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.10 ஆயிரம் முதலீட்டில் 16 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ்!
அஞ்சலகத்தின் RD திட்டம் என்பது மக்களின் மிக விருப்பமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏனென்றால் கையில் இருக்கும் குறைவான தொகையை வைத்து, இந்த திட்டத்தின் மூலம் டெபாசிட் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை எப்படி தொடங்குவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
RD திட்டம்:
இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அவசியமான ஒன்றாகும். அதிலும் அஞ்சலக சேமிப்பு என்பது மிக பாதுகாப்பானவையாக உள்ளது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி தரும் வட்டி விகிதத்தை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாமானிய மக்கள் முதல் மிடில் கிளாஸ் மக்கள் வரை அனைவரும் அஞ்சலக திட்டங்களை நாடுகின்றனர். சிறிய முதலீட்டில் அதிக முதிர்வு தொகை ஈட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் தான் நல்ல தேர்வு ஆகும். அந்த வகையில் வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வதை போல், தபால் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட்(RD) திட்டத்திலும் நல்ல பலனை பெறலாம்
IPL சீசன் 15: மும்பைக்கு பதிலாக சூரத்தில் பயிற்சி மேற்கொள்வது ஏன்? CSK பயிற்சியாளர் விளக்கம்!
இந்த RD திட்டம் மாத சம்பளதாரர்களுக்கு, சாமானியர்களுக்கும் ஏற்ற ஒரு திட்டமாகும். ஏனெனில் மாத மாதம் சம்பளம் வாங்கிய பின்னர் சேமித்து வைக்கலாம். இந்த திட்டத்தை தொடங்குவது மிக எளிது. இந்த கணக்கை, ஆதார், பான் கார்டு, போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் சேர்த்து, பணம் அல்லது காசோலையை கொண்டும் தொடங்கலாம். நாமினியை நியமித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். மேலும் 2 பேர் சேர்ந்து ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஆகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே திட்டங்கள் வங்கிகளில் இருந்தாலும், அஞ்சலகங்களில் வட்டி விகிதம் அதிகம்.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், குறைந்தப்பட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீடாக எந்த வரம்பும் இல்லை. இந்த திட்டத்தில் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில், ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி தொகை வாடிக்கையாளரின் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு நபர் மாதம் 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்தால், 5.8 சதவீதம் வட்டித் தொகை செலுத்தப்படும். அதன்படி, 10 ஆண்டுகளில் கணக்கின் இருப்பு ரூ16 லட்சத்தை தொட்டுவிடும். ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி கிடைப்பதால், முதலீட்டுக்கு நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சலக RD கணக்கை 3 வருடத்திற்கு பிறகு முடித்துக் கொள்ளலாம். அப்படி முன்கூட்டியே முடித்துக் கொண்டால் அஞ்சலகத்தின் சேமிப்பு கணக்குக்கு கிடைக்கும் வட்டியை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம்.