தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – பிப்.22 கடைசி நாள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சல் நிலத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பணிக்கான நேரடி முகவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வருவதால் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஒப்பந்த அடிப்படையிலும் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியாகும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அரசின் அதிரடி முடிவு!
அதன் தொடர்ச்சியாக தற்போது அஞ்சல் துறையும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தற்போது காரைக்குடியில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. சுயதொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தாரர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!
மேலும் வயது வரம்பு வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.ரூ.5 ஆயிரத்துக்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித் தரப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் காரைக்குடி கோட்டம் – 630003 என்ற முகவரிக்கு வரும் பிப்ரவரி 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.