மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அரசின் அதிரடி முடிவு!

0
மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அரசின் அதிரடி முடிவு!
மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அரசின் அதிரடி முடிவு!
மாநிலத்தில் இரவு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்? அரசின் அதிரடி முடிவு!

உத்தரபிரதேசத்தில் கோவிட் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் முன்னதாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இரவு ஊரடங்கு நீக்கம்:

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த சமயத்தில் நாட்டின் பல பகுதிகள் ஜனவரியில் ஓமைக்ரான் மாறுபாட்டின் அதிக அளவிலான பாதிப்புகளை பதிவு செய்து வந்தது. அந்த சமயத்தில் இந்தியாவில் தினசரி நோய்த்தொற்றுகள் 3.4 லட்சத்திற்கு அதிகமாக சென்றது. அதேநேரத்தில் உத்தரபிரதேசத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 18,000-ஐத் தாண்டியது. டெல்லியில் ஜனவரி 13 அன்று 28,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. நாட்டிலேயே மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் அதிக அளவிலான தொற்றுநோய் பாதிப்பை பதிவு செய்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!

தற்போது இந்த வாரத்தின் தொடக்கம் முதல் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவும் மற்றும் கட்டுப்பாடுகளை எளிதாக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியிருந்தார். பிப்ரவரி 12 முதல் இந்தியாவில் ஒரு நாளில் 50,000க்கும் குறைவான கோவிட் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், 22,270 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – நாளை நிறைவு!

மத்திய அரசின் வலியுறுத்தலை தொடர்ந்து ஹரியானா அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்கியது. தொற்றுநோய் பாதிப்பின் தாக்கம் தொடங்கியதில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பாதிப்புகளை உறுதி செய்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேருக்கு புதியதாக நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவிட் நோய் பாதிப்பு குறைந்து வருவதால் உத்தரப் பிரதேசத்தில் சனிக்கிழமையான இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தியிருந்த இரவு ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகிறது. மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தல் நடக்க இருப்பதால் நோய் தொற்று அதிவேகத்தில் பரவும் அபாயம் இருப்பதாக அரசு முன்னதாக கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!