மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – விரைவில் ஹாப்பி நியூஸ்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி:
இந்தியாவில் கடந்த 2021 ஊரடங்கு காலத்தில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதன் பிறகு கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிப்பது குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது. தற்போது அதிகரித்து வரும் விலைவாசிக்கு மத்தியில் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு அவசிய ஒன்றாக உள்ளது. அதனால் அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – நாளை நிறைவு!
இதனால் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக ஊழியர்களின் வெகு நாள் கோரிக்கையான சம்பள உயர்வு குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி நிலுவையில் உள்ள அகவிலைப்படி, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு போன்றவைகளும் இந்த ஆண்டு உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் அதிகம் எதிர்பார்த்த அகவிலைப்படி ஹோலி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வந்துள்ளது. மேலும் அகவிலைப்படி நிலுவைத்தொகையையும் ஒரே செட்டில்மெண்டாக வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நுகர்வோர் விலை பணவீக்கம் 6.01% உயர்ந்துள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வாகும் அதனால் அகவிலைப்படி உயர்வு அவசியமாக உள்ளது.