தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள 38,926 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டனர். அதனால் எப்போது ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தியது. பிறகு வேலைவாய்ப்புகளை வழங்க அரசு மற்றும் தனியார் துறைகள் முன் வந்து அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அஞ்சல் துறையும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
TN TRB 2207 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஜூலையில் தேர்வு முடிவுகள்!
அதில் கிராம தபால் சேவை பதவியில் காலியாக உள்ள 38,926 கிராமின் டக் சேவக், போஸ்ட் மாஸ்டர், உதவி தபால் மாஸ்டர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வயது வரம்பு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் SC/ST, BC பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 5ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்கள் அடங்கிய உரிய ஆவணங்களையும் பதிவு செய்யும் போது அப்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக UR / OBC / EWS பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். SC / ST /பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. கிரெடிட் / டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களுக்கு ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gd opportunity in my life