TN TRB 2207 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – ஜூலையில் தேர்வு முடிவுகள்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை கணினி வழியில் நடத்தியது. அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விபரங்களை வெளியிட்டு உள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் போன்ற பணிகளில் இருந்த மொத்தம் 2207 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தியது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி அன்று வெளியிட்டது. விடைக் குறிப்புகளுக்கான ஆட்சேபனைகள் இருப்பின் அதை ஏப்ரல் 13ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி மொத்தம் 29,141 பேர் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர். இவற்றை குறித்து ஆராய தேர்வு வாரியம் தயாராக உள்ளது. இருப்பினும் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து விடைக்குறிப்பை சரி பார்க்கும் பணியை தொடர முடியவில்லை. பாடவாரியாக மட்டுமே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு விடைக்குறிப்பு குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதற்காக குறைந்தது 1 மாதம் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அதன் பின்னரே இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, விடைத்தாள்கள் கணினி வழியாக திருத்தம் செய்யப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதனால் 45 நாட்கள் குறைந்தபட்சம் தேவைப்படும், பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வேண்டும். இதனால் தேர்வுக்கான முடிவுகள் ஜூலையில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.