டோக்கன் பெறாதவர்களுக்கும் இன்று முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொதுமக்கள் கவனத்திற்கு!!
பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் பெறாதவர்களுக்கு இன்று முதல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 1.86 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜன.10 ஆம் தேதி முதல் 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேஷ்டி, சேலை மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கன் வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தையை பிரிக்கும் ஈஸ்வரி.. தற்கொலை செய்ய போகும் ஜெனி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
இந்நிலையில், இன்று முதல் டோக்கன் பெறாதவர்களும்பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, டோக்கன் பெறாதவர்களும் உடனடியாக ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கியவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். நீங்கள் பரிசுத்தொகுப்பை பெறாமலேயே உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் உடனடியாக புகாரளித்து உங்களுக்கான பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளுங்கள்.