குழந்தையை பிரிக்கும் ஈஸ்வரி.. தற்கொலை செய்ய போகும் ஜெனி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!

0
தற்கொலை செய்ய போகும் ஜெனி -

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் மீது ஏகப்பட்ட குற்றங்களை சொல்லி ஜெனி விவாகரத்து கேட்கிறார். உடனே ஈஸ்வரி குழந்தையை பிரித்து வாங்க சொல்ல சொல்ல அடுத்து வருவது எல்லாம் பெரிய திருப்பமாக இருக்கிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில், செழியன் மாலினி உறவு தெரிந்து ஜெனி பயங்கர கோவத்தில் இருக்கிறார். விவாகரத்து வரை அவர் சென்றுவிட, பிரச்சனை முடிவதாக தெரியவில்லை. ஈஸ்வரி இனிமேல் அவள் தேவை இல்லை என முடிவு செய்ய சொல்கிறார். ஆனால் செழியன் என் மீது தான் தவறு என சொல்கிறார். இந்நிலையில் செழியனுக்கு தெரியாமல் குழந்தையை கொடுக்க சொல்லி ஈஸ்வரி வக்கில் நோட்டீஸ் அனுப்புகிறார்.

அதனால் பிரச்சனை பெரிதாக ஜெனி குழந்தையை கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால் ஜெனி அப்பா அம்மா குழந்தை இல்லை என்றால் உனக்கு இந்த வீட்டில் இடமில்லை என வெளியே அனுப்புகின்றனர். அதனால் ஜெனி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார். அப்போது பாக்கியாவும் செழியனும் சென்று அவரை காப்பாற்றுகிறார்கள். ஜெனியிடம் செழியன் நீ இல்லாமல் இருக்க முடியாது என மனம் உருகி மன்னிப்பு கேட்க இருவரும் சேர இருக்கின்றனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!