PM கிசான் திட்ட விவசாயிகளுக்கு ரூ.12,000 உதவித்தொகை – மத்திய அரசின் புதிய திட்டம்!!
2024 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத் தொகை ரூ.12000 வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட்:
2024- 25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதனை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. இருந்தாலும் இந்த முறை பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் பல நல்ல அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஆண்டுத் தொகை இந்த பட்ஜெட்டில் ரூ.12000 ஆக உயர்த்தப்படலாம் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது மட்டுமில்லாமல், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் மீது அரசு கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண்களின் பங்கு 59.26 சதவீதமாக உள்ள நிலையில் அது அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.